ரயில் மூலம் கோவைக்கு வந்த 29.24 டன் திரவ நிலை ஆக்சிஜன்

ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில்மூலம் 29.24 டன் திரவ நிலை மருத்துவ ஆக்சிஜன் நேற்று அதிகாலை கோவை வந்தடைந்தது.
கோவையில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை பெற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 14-ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v6Ren7
via
No comments