Breaking News

கரோனா பீதியும், அச்சத்தையும் போக்கும் வகையில் ‘ப்ராஜக்ட் இமை’, ‘உதவி’ திட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை: 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா அச்சம் குறித்தும் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய மருத்துவ சங்கமும், சிஎம்சி மருத்துவமனையும் இணைந்து தொடங்கியுள்ள இலவச ஆலோசனை திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருப்பதால் மக்கள் மத்தியில் பீதி கலந்த அச்சம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரோனா இரண்டாம் அலை தொற்றில் ஆக்சிஜன் அளவு குறைபாடு காரணமாக மூச்சுத் திணறலுடன் அதிகம் பேர் பாதிப்பதுடன் சிகிச்சை பெறாமல் வீடுகளில் உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2T24afT
via

No comments