Breaking News

தீவிரமாகும் கரோனா 2-வது அலை; தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு, உயிரிழப்புகள்- புதிய சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு காத்திருக்கும் சவால்கள்

தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியனுக்கு மாபெரும் சவால்கள் காத்திருக்கின்றன.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு26 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளால் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் படுக்கை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. தனியார்மருத்துவமனைகளில் பதிவு செய்து2, 3 நாட்களுக்கு பிறகே படுக்கைகள்கிடைக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xTgSxv
via

No comments