Breaking News

திருப்பத்தூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ‘சீல்’

திருப்பத்தூரில் உரிய அனுமதி யின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை நகர் புறங்களைக் காட்டிலும் கிராமப்பகுதி களில் அதிகரித்து வருகிறது. கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனை களில் காய்ச்சல் எனக்கூறி நிறைய பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34xRVuc
via

No comments