Breaking News

திமுக ஆட்சியில் அமைச்சர் இல்லாத மாங்கனி மாவட்டம்: வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கட்சியினர் வேதனை

திமுக ஆட்சியில், அமைச்சர் இல்லாத மாவட்டங்களாக தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளதாக கட்சியினர் வருத்தம் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானது. இதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2011, 2016 அதிமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், இருவரும் 5 ஆண்டுகள் முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vUI3Xc
via

No comments