கரோனா கட்டுப்பாட்டால் குறைந்தது வரத்து: சீசன் தொடங்கியும் களைகட்டாத மாம்பழம் விற்பனை

மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் சந்தை களில் பழங்கள் வரத்துக் குறைவாக இருப்பதால் விற்பனை இன்னும் களைகட்டவில்லை. கரோனா ஊரடங்கு ஏற்படுத்திய நெருக்கடியால் மக்கள் மத்தியில் மாம்பழங்களுக்கு முன்பிருந்த வரவேற்பு இல்லை.
மாம்பழ சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் வரை மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் மாம்பழ சீசன் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் ஏமாற்றமாக இருந்தது. இந்த ஆண்டு மாம்பழ சீசன் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போது வரை சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து பெரியளவில் இல்லை. வரத்துக் குறைவாக இருப்பதால் அதன் விலை அதிகமாக இருக்கிறது என மதுரை மாவட்ட பழ வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vCLly7
via
No comments