Breaking News

வெளிநாடுகளில் படித்து, பயிற்சி மருத்துவர் பணிக்காக காத்திருக்கும் 1,000 மருத்துவர்களை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, பயிற்சி மருத்துவராகப் பணியாற்றக் காத்திருக்கும் 1,000 மருத்துவர்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மருத்துவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை மிகத் தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட்டும் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ubUPQw
via

No comments