Breaking News

சென்னை மாநகரப் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை மாநகரப் பகுதியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திஉள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 800 படுக்கைகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xPu5rj
via

No comments