Breaking News

100 நாள் வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணி தரக் கூடாது: உத்தரவை திரும்பப் பெற சிபிஎம் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் கிராமப்புறஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பு இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்று தமிழகஅரசின் உத்தரவு இத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய 55 வயதுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராமப்புறத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3q8MDPG
via

No comments