‘சேவாபாரதி' நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றதால் சர்ச்சை: ஆர்.எஸ்.எஸ்.வுடன் இணக்கமாக செல்கிறதா திமுக?

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தன்னார்வ தொண்டு அமைப்பான சேவாபாரதி நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் திமுக இணக்கமாக செல்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
திமுகவும், பாஜகவும் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் கடுமையாக மோதிக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் ஓர்இணக்கமான போக்கை திமுககடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. திமுகதலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ்.அகில இந்திய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் நகலை தமிழக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கடந்த 2018-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iZJS1s
via
No comments