Breaking News

பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 100 சதவீதம் வரி விதிப்பு: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் குற்றச்சாட்டு

மத்திய அரசு பெட்ரோல், டீசல்விலையை குறைக்க வேண்டும், கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களின் குடும்பத்துக்கு 6 மாதங்களுக்கு ரூ.7,500 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்), விடுதலை சிறுத்தைகள் ஆகியவை சார்பில் ஜூன் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாவட்ட செயலாளர் கஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நீல வானத்து நிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jlaDxK
via

No comments