Breaking News

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகள் ஒதுக்கீட்டில் திருத்தம்: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் உறுதி

முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகள் ஒதுக்கீட்டில் இப்போதுள்ள சூழலுக்கு ஏற்ப திருத்தம் மேற்கொள்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே 22-ம் தேதி விரிவான அரசாணையை வெளியிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uPhHVs
via

No comments