Breaking News

விளையாட்டாய் சில கதைகள்: படகுப் போட்டியின் வரலாறு

உலகம் தோன்றிய காலம்தொட்டு மனிதனை மலைக்க வைத்த விஷயம் கடல். ஒரு காலகட்டத்தில் கடலோடு உலகின் எல்லை முடிந்துவிட்டதாக மனிதன் நினைத்திருந்தான். ஆனால் பின்னர் கடலுக்கு அப்பால் மற்றொரு நாடு இருப்பது தெரிந்ததும், அந்நாட்டுக்கு செல்வதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். இதற்காக அவன் உருவாக்கிய விஷயங்களில் ஒன்று பாய்மரக் கப்பல்.

17-ம் நூற்றாண்டில், பாய்மரக் கப்பலின் மறு அவதாரமாக பாய்மரப் படகுகள் உருவாகின. இதே நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் பாய்மரப் படகுகளை வைத்து போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டி மெல்ல மெல்ல இங்கிலாந்துக்கும், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fQNJwa

No comments