Breaking News

தமிழகத்துக்கு ரூ.50 லட்சத்தில் 330 ஆக்சிஜன் உருளைகள்: அமீரக தொழிலதிபர் வழங்கினார்

கரோனா சிகிச்சைக்காக ரூ.50 லட்சம் செலவில் 330 ஆக்சிஜன் உருளைகளை, ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் சாகுல் ஹமீது தமிழக அரசிடம் வழங்கினார்.

கரோனா 2-வது அலையில் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தவிர்க்க மாநில அரசு பலவித முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதனிடையே அமீரகத்தில் இயங்கும் நோபல் மரைன் குழும மேலாண்மை இயக்குநரும், அமீரக தமிழ் மக்கள் மன்ற சமுதாயப் புரவலருமான தொழிலதிபர் ஹாஜி.சாகுல் ஹமீது, ரூ.50 லட்சம் மதிப்புள்ள 330 ஆக்சிஜன் உருளைகளை அமீரகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g4yf6y
via

No comments