Breaking News

தேசிய நெடுஞ்சாலையில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ரத்து; 60 முதல் 100 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு: மக்கள் நலன் கருதி நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

விரைவு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்தியாவின் சாலை கட்டமைப்புக்கு ஏற்றவாறு வாகனங்கள் 60 முதல் 100 கிமீ வேகத்துக்குள் செல்ல அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைமத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய சாலைகளில் நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி ஒவ்வொருமணி நேரத்துக்கும் 48 இருசக்கர வாகனஓட்டிகள் விபத்துகளால் உயிரிழப்பதாகவும், வாகனங்களின் அதிவேகமே இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்றும் தேசிய குற்ற ஆவணப் பதிவேடு சொல்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு 1.37 லட்சமாகஇருந்த விபத்து எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 4.67 லட்சமாக உயர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ykn58j
via

No comments