Breaking News

கொள்ளையர்கள் தாக்கியதால் உயிரிழந்த கோயில் காவலர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருவல்லிக்கேணி தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் கொள்ளையர்கள் தாக்கியதால் உயிரிழந்த ஒப்பந்த நியமனக் காவலர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோயிலில் பாபு என்பவர், ஒப்பந்த அடிப்படையில் காவலராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 17-ம் தேதி கோயில் உண்டியலை கொள்ளையடிக்க வந்த கும்பலால் பாபு தாக்கப்பட்டார். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாபு, கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dfGaxn
via

No comments