Breaking News

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்; தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 6 குழுக்கள்: வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச் சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்தும், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிக்க மறுப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர்களிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yUNDLd
via

No comments