Breaking News

முத்திரையிடாத எடையளவுகளை முத்திரையிட காலஅவகாசம்: தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு

முத்திரையிடாத எடையளவுகளை வரும் செப். 30-ம் தேதிக்குள் கூடுதல் கட்டணமின்றி மறு முத்திரையிட்டுக் கொள்ளலாம் என்று தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வணிக நிறுவங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் எடைகள், அளவைகள், தராசுகள், எலெக்ட்ரானிக் தராசுகள், எடைப் பாலங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பம்புகள், எரிபொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் இதர எடையளவுக் கருவிகளை ஊரடங்கு காரணமாக உரிய காலத்தில் மறுமுத்திரையிட இயலவில்லை என்று தொழில் நிறுவனங்கள், சங்கங்கள் தெரிவித்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35YPYaR
via

No comments