Breaking News

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது; நூதனமாக பணம் திருடியது எப்படி? - நடித்துக் காட்டிய கொள்ளையன்: கைது செய்யப்பட்ட மற்ற இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டம்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையர்களில் மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே கொள்ளையை அரங்கேற்றியது எப்படி என்பதை போலீஸார் முன்னிலையில் நேற்று கொள்ளையடித்த நபர் தத்ரூபமாக நடித்து காண்பித்தார்.

சென்னையில் வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், தரமணி, பெரியமேடு உள்பட 15 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை குறி வைத்து கும்பல் ஒன்று நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்கள், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு இடம் என தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கைவரிசை காட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2U5fFDY
via

No comments