Breaking News

‘மின் பராமரிப்பு பணிகளை இன்றைக்குள் முடிக்க வேண்டும்’

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில் மின் பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாததே மின் தடைக்குக் காரணம் என்று தற்போதைய மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். மேலும், 10 நாட்களுக்குள் அனைத்து மின் பராமரிப்புப் பணிகளையும் முடித்து, மின் தடை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 19-ம் தேதி முதல் மின் பராமரிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்துக்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் இன்றுடன் (ஜூன் 29) முடிவடைகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3doT2B6
via

No comments