மேகேதாட்டு அணை தொடர்பான வழக்கு ஆய்வுக் குழுவை கலைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. அந்த வழக்கில், அத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பெங்களூரு மாநகரின் குடிநீர் பயன்பாட்டுக்கு 4.75 டிஎம்சி நீரை கொண்டு செல்லவும், அந்த அணையில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vFZf1K
via
No comments