பொன்னேரி கிளை சிறையில் கைதிகளை பார்க்க லஞ்சம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவை அருகே கிளை சிறை செயல்பட்டு வருகிறது.
இங்கு வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் 100பேர் வரை விசாரணை கைதிகளாகநீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை, அவர்களின் உறவினர்கள் பார்ப்பதற்கு சிறைத் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35MfJLe
via
No comments