Breaking News

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் தொற்றாளர்களுக்கு தனி மருத்துவர் குழு மூலம் சிகிச்சை: சேலம் அரசு மருத்துவமனை டீன் தகவல்

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் வருபவர்கள் உள் அனுமதிக்காக காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை அளிக்க முதுநிலை மருத்துவர் தலைமையிலான தனி குழு மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கரோனா நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை கடந்த நாட்களில் ஏற்பட்டது. இந்நிலையில், தொற்றாளர்கள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் கவனிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pmJefN
via

No comments