Breaking News

வேகமாக பரவி வரும் கரோனா 2-வது அலை காரணமாக திருச்சியில் மே மாதத்தில் மட்டும் 370 பேர் உயிரிழப்பு: 50 வயதுக்கு மேற்பட்டோர் பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் அறிவுரை

கரோனா 2-வது அலை வேகமாக பரவிவருவதால், திருச்சி மாவட்டத்தில் மே மாதத்தில் மட்டும் 370 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்.30-ம் தேதி வரை 211 பேர் மட்டும் உயிரிழந்துள்ள நிலையில், மே 31-ம் தேதி வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 581 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பவர்களில் 50- 80 வயதுக்குட்பட்டவர்களே அதி கம் என்பதால், இந்த வயதினர் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 28 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SVU9AM
via

No comments