Breaking News

புதுச்சேரி ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் இயங்காத தனியார் பேருந்துகள்: நகருக்குள் வேலைக்கு வருவோர் கடும் திண்டாட்டம்

ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் புதுச்சேரியில் இயங்காத தனியார் பேருந்துகளால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிக்கு பணிக்கு வருவோர் இதனால் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி கூடுதல்தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில், அனைத்து தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மாலை 5 மணி வரை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்த தளர்வில் மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cV7TTF
via

No comments