Breaking News

கரோனா பரவலுக்கு நடுவில் களப்பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளர் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்களா?

கரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழலிலும் வீடு வீடாகச் சென்று உலர் உணவுப் பொருட்களை வழங்கி வரும் தங்களை முன்களப் பணியாளர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததற்கு, அங்கன்வாடிப் பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கரோனா 2-ம் அலை பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை, காவல் துறை, செய்தியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்து அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. நோய்த் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gGD4Ev
via

No comments