Breaking News

ரேஷன் கடைகளில் விற்பனையாளர் இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தவிக்கும் மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் மற்றும் புதுப்பட்டினம் மீனவக் குப்பம், வாயலூர் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்காக ரேஷன் கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், புதுப்பட்டினம் தவிர பிற கடைகளில் விற்பனையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் புதுப்பட்டினம் ரேஷன் கடை விற்பனையாளர், மீனவக் குப்பம் மற்றும் சதுரங்கப்பட்டினம் கடைகளை கூடுதலாக கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்கும்போது, கிராம மக்கள் அனைவரும் பொருட்கள் வாங்க ஒரே நேரத்தில் கூடுவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3x5ZNQ5
via

No comments