ஓ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி தவறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திட்டவட்டம்

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கூட்டணி மூலமாக 23 தொகுதிகளைப் பெற்றுக்கொண்ட பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி வருகிறார். கூட்டணியில் பாமக இல்லையென்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று அவர் கூறுகிறார். முதலில், போட்டியிட்ட 23-ல் 18 இடங்களில் தோல்வியடைந்ததை பற்றி பாமக ஆய்வு செய்ய வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cFlkqO
via
No comments