சரிவில் இருந்து பின்னலாடைத் துறையை மீட்க உள்நாட்டு உற்பத்தியை அனுமதிக்க வேண்டும்: திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பின்னலாடைத் துறையை சரிவில் இருந்து மீட்க, உள்நாட்டு உற்பத்திக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திருப்பூர் தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடைத்துறை மூலம் ஆண்டுக்குரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதிமற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டுவந்த நிலையில், கரோனா தொற்று பரவலால், ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்துவரும் பின்னலாடை நிறுவனங்களை கரோனா தொற்றின் 2-ம் அலை மிகவும் பாதிக்க செய்துள்ளதால், தொழில் துறையினர் சோர்வடைந் துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wWW7Ap
via
No comments