ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-வது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
கரோனா பரவல் காரணமாக, எம்எல்ஏக் கள், பேரவைச் செயலக பணியாளர்கள், செய்தியாளர்கள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு, பரிசோதனைகள் முடிக்கப் பட்டுள்ளன. ‘நெகட்டிவ்’ என முடிவுகள் வந்தவர்கள் மட்டுமே பேரவைக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iXKYL9
via
No comments