Breaking News

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி போடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவசியத் தேவை கருதி, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி சில தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36046QZ
via

No comments