கும்பகோணம் வந்தடைந்த காவிரி நீருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

டெல்டா பாசனத்துக்காக காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்துக்கு நுங்கும், நுரையுமாக பொங்கி வந்ததையடுத்து, காவிரி நீருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், காவிரி தாய்க்கு நன்றி தெரிவித்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலும், தொடர்ந்து, ஜூன் 16-ம் தேதி கல்லணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் தண்ணீ்ர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, கும்பகோணத்தில் கல்யாணராமன் படித்துறை, டபீர் படித்துறை, பகவத் படித்துறைகளில் தேங்கியிருந்த குப்பையை நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அகற்றி சுத்தம் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zGTxQM
via
No comments