எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என்ற போலீஸ் அறிக்கை மீது நீதிமன்றம் முடிவு எடுக்கும்: தலைமை நீதிபதி அமர்வு கருத்து

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்புபோலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் கடந்த 2018-ம்ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iZBNtL
via
No comments