Breaking News

புதுச்சேரியிலும் எஸ்பிஐ ஏடிஎம்மில் டெபிட் கார்டு மூலம் திருட்டு: ஹரியாணா மாநில கொள்ளையர்கள் கைவரிசை

புதுச்சேரி அருகே எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், சென்னையில் பல்வேறு இடங்களில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் கைவரிசை காட்டிய ஹரியாணாவைச் சேர்ந்த கொள்ளையர்களே இங் கும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி அடுத்த கன்னியக் கோயில் பகுதியில் மணப்பட்டு எஸ்பிஐ கிளை உள்ளது. வங்கி அருகிலேயே ஏடிஎம் மையமும் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் பரிவர்த்தனை மற்றும் கையிருப்புகள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35ZbDzu
via

No comments