Breaking News

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நில அளவையர்கள் ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியக் கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நில அளவீடு செய்வது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைவிசாரித்த தனி நீதிபதி, "நவீனஇயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நில அளவீடு செய்ய வேண்டும். பணம் செலுத்திய 30 நாட்களில் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும். தவறினால் கட்டணத்தை திரும்பவழங்க வேண்டும். நில அளவீட்டுக்கு தனிப்பதிவேடு பராமரிக்கவேண்டும். நில அளவையர்கள் குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j7QAkv
via

No comments