Breaking News

கபட பத க-க மத கலநத அடய படய

‘அட்யா பட்யா’ என்ற விளையாட்டு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டின் பெயரே நம்மில் பலருக்கும் இது என்னய்யா… விளையாட்டு, இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது. இத்தனைக்கும் இந்த விளையாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்காசிய அட்யா பட்யா போட்டியில் 7 முறை தங்கப் பதக்கம் வென்று குவித்துள்ளது. அட்யா பட்யா என்பது சோழர் காலத்தில் தோன்றிய விளையாட்டாக கூறப்பட்டு வருகிறது. இதில் இருந்து பிரிந்ததே கபடி, கோ-கோ என்ற கருத்தும் உலா வருகிறது.

1982-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஜிம்கானா விளையாட்டு சங்கம் சார்பில் எஸ்டபிள்யூ தாபே என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் இந்தியா முழுவதும் அட்யா பட்யா என்ற பெயரில் விளையாடப்பட்டது. 1982-ம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே கலந்துகொண்டன. அதன் பின்னர் இந்த விளையாட்டு மற்ற மாநிலங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தமிழகத்தில் 1996-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SfB8vhl

No comments