Breaking News

பஞ்சாபில் தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசிகள் விற்பனை

கரோனா தடுப்பூசியை அதிக விலைக்கு தனியார் மருத்துவ மனைகளுக்கு பஞ்சாப் மாநில அரசே விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. இதனிடையே கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fShMUb
via

No comments