நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் புதிய தொழிற்சாலை கட்டுமான பணி தீவிரம்

மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி கிராமத்தில் கடற்கரைஓரத்தில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும், புதிய தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, நாள்தோறும் 100 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக தென் சென்னை பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு ரூ.1,259 கோடி மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகளை, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wyHhQh
via
No comments