Breaking News

நெல்லையப்பர் கோயிலில் மூடப்பட்ட 3 வாசல்கள் 17 ஆண்டுக்கு பிறகு திறப்பு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூடப்பட்ட வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 திசைகளிலும் வாசல்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வடக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மூடப்பட்டன. கிழக்கு பகுதியில் உள்ள பிரதான வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AQlENV
via

No comments