அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட 5,200 பேர் மீது வழக்கு

தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி திமுக அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஊரடங்கு காரணமாக ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இருப்பினும் அதிமுகவினர் அறிவித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் வீட்டின் முன்பு அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C5VBmy
via
No comments