58 ஆண்டுகளில் புதுச்சேரியில் இரு பெண் அமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவை தேர்த லில் பெண்களுக்கான வாய்ப்பு குறைவுதான். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழத் தொடங் கியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு குறைந்த அளவே வாய்ப்பளித்து வந்தன. முதல் சட்டப்பேரவையில் (1963-1964)சரஸ்வதி சுப்பையா, சாவித்திரிஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திர சேகரன்,அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட் டனர். 3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4 மற்றும் 5-வதுசட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dHJ1PR
via
No comments