Breaking News

இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்த தமிழக மீனவர்களின் 9 படகுகளை அழிக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கடந்த 5 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 1,300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் மத்திய,மாநில அரசுகளின் முயற்சிகளினால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hAcoWz
via

No comments