தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று முதல் அமல்: பேருந்து போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், கடந்த மே 24-ம் தேதி தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 5 கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று (5-ம் தேதி) காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த2-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஊரடங்கு வரும் 12-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர,தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qNECA7
via
No comments