மாணவிகளிடம் ஆபாச பேச்சு: கைதான ஆசிரியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஹபீப் முகம்மது(36) ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் விசாரணை செய்து கடந்த ஜூன் 22-ம் தேதி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து பரமக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். விசாரணையில் மாணவிகள் பலரிடம் ஆசிரியர் ஆபாசமாகப் பேசியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hAkxu8
via
No comments