Breaking News

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி குழுவினர் இன்று டெல்லி செல்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி, ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கின்றனர்

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதற்காக, இன்று தமி ழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி புறப் பட்டுச் செல்கின்றனர்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆண்டு தோறும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை முழுமையாக கர்நாடகம் தருவதில்லை. இந் நிலையில், நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு முர ணாக, காவிரியின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்து கர்நாடக அரசு பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kooGTF
via

No comments