கொளத்தூர் ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் ஓராண்டுக்குள் அகற்றப்படும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வல்லுநர் குழு உறுதி

சென்னை கொளத்தூர் ஏரியில் 3 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை, சென்னை குடிநீர் வாரியம், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக நீரியில் பேராசிரியர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2TGvTDJ
via
No comments