ஒலிம்பிக் தொடக்க விழாவில்: மேரி கோம், மன்பிரீத் சிங் தேசிய கொடியை ஏந்திச் செல்வர்

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்தர் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் நடைபெறும் தொடக்க விழா அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தியபடி இந்திய குழுவினரை வழிநடத்திச் செல்வார்கள். ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dLk06k
No comments