Breaking News

ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

ஆன்லைன் மூலம் கல்வி பயில முடியாத கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அரசு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருவது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், கோட்டூர், தென்சித்தூர், கெங்கம்பாளையம், மேட்டுக்காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 155 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைன் வழியாக படித்து வருகின்றனர். இதில் ‘ஸ்மார்ட் போன்’ வசதியில்லாத மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது. மாணவர்கள் கல்வி கற்பது தடைபட்டு விடக்கூடாது எனக் கருதிய அரசுப்பள்ளி தமிழ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடு தேடிச் சென்று பாடம் கற்பித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yhNgcW
via

No comments