புதிய மடாதிபதி 10 நாட்களுக்கு பிறகு தேர்வு

தமிழகத்தின் மிகப் பழமையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மக்களிடம் சைவ சமய சித்தாந்தங்களையும், கருத்துகளையும் பரப்பும் வகையில் இந்த ஆதீனம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்த ஆதீனத்துக்கு இதுவரை 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர். 292-வது ஆதீனமாக 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வந்தார். 40 ஆண்டுகள் சைவத் தொண்டை சிறப்புறச் செய்தவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VUWmxU
via
No comments