Breaking News

அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்தக் கோரி ஆக.16-ல் அரசு ஊழியர்கள் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி உயர்வை உடனேஅமல்படுத்தாதது உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புஏதும் வெளியாகாததைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆக.16-ம் தேதி 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாவட்டஅரசு ஊழியர் சங்கத் தலைவர் ஜெ.மூர்த்தி, செயலாளர் நீதிராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. அரசு ஊழியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது வரவேற்புக்குரியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g4cOU1
via

No comments